Search This Blog

Wednesday, June 6, 2012

ஆரம்ப விண்ணியல் - 1


புத்தகத்தை எழுதியவர் திரு. செந்தில் நாதன். இலங்கைத் தமிழர். பல நாடுகளுக்கு ஆராய்ச்சிற்காக சென்றவர். வானிலை துறையில் பல ஆண்டுகளாக பணி புரிந்தவர். வழக்கறிஞ்கராகவும் பணி புறிந்தவர். இனி நேரடியாக புத்தகத்திற்கு போயிடலாம்.

வரலாற்று புத்தகங்களையோ அல்லது புதினங்களையோ எதிரே இருக்கிறவர்களுக்கு புரிகின்ற மாதிரி சுருக்கிச் சொல்லலாம். அறிவியல் புத்தகங்களில் எதை சுருக்குவது, எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்று விளங்கவில்லை. ஏற்கனவே பலமுறை சோதித்து, அதன்பயன் கிடைத்த விடையத்தான் நாம் இன்று கொண்டாடும் அறிவியல். அதை நமக்கு எளிதில் விளங்கும்படி புத்தகத்தில் விளக்கியிருந்தாலும், எது அதீத முக்கியம் என்று நான் கருதுகிறேனோ, அதை இங்கு அட்டவணை படுத்துகிறேன்.

அறிமுகம்:
  •     பண்டைய எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், இந்தியர்கள் & சீனர்கள் வானியலில் அல்லது வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கினர்.
  •     கி.மூ 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரிஸ்ரோட்டிலும் (Aristotle), கி.பி 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த ரொலமியும் (Ptolemy)  பூமி தட்டையானதல்ல உருண்டையானது என ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தனர். அதே நேரம் பூமியானது அண்டத்தில் அசையாமல் இருக்கிறதென்றே அவர்களும் நம்பினர். இவர்களின் கொள்கை தங்களது சமையத்திற்கு ஏற்றதாக அமைந்ததால் கத்தோலிக்க சபைகளும் அதை ஏற்றுக் கொண்டனர். அதற்கு முன்புவரை பூமி தட்டையானதென்றும், நட்சத்திரங்களும், ஏணைய விண்மீன்களும் 24 மணிக்கொரு முறை பூமியைச் சுற்றிவருவதாக அனைவரும் நம்பினர். கி,பி 14ம் நூற்றாண்டு வரை இதை அனைவரும் நம்பிவந்தனர்.
  •   16ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் போலந்து நாட்டு விஞ்ஞானியான நிக்கலஸ் கோப்பேணிக்கஸ் (Nicholas Cipernicus, 1473-1543) என்பவர் பூமி அண்டத்தின் மத்தியில் இல்லை, சூரியனை மையமாக் கொண்டே எல்லா கிரகங்களும் இயங்குகின்றன எனக் கூறினார். எனினும் அந்த காலத்து மக்கள் இவரின் கூற்றை நம்பவில்லை.
  •   இத்தாலி நாட்டு விஞ்ஞானியான கலிலியோ கலிலி (Galileo Galilei, 1564-1642) நிக்கலஸின் முடிவை ஏற்றுக் கோண்டு மேலும் பல ஆராய்ச்சிகளைச் செய்து பல உண்மைகளாஇக் கண்டுபிடித்தார். இவரே முதல் தொலைநோக்கியையும் கண்டுபிடித்தார். பூமிதான் மையமானது என்ற கொள்கை பொய் என்பதை நிருபித்தார். ஆனால் இது தனது மதத்திற்கு எதிரான கருத்து என்பதால் கத்தோலிக்க திருச்சபை இவரை சிறையிலடைத்தனர்.
  • இவர்களுக்குபின் தோன்றிய ரைக்கோ பிராஹே (Tycho Brahe), கெப்ளர் (Kepler) போன்ற விஞ்ஞானிகள் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்து நிக்கலஸ் மற்றும் கலிலியோவின் ஆராய்ச்சி முடிவுகள் உண்மையெனவும், சூரியனைச் சுற்றிவரும் கிரகங்களின் பாதை வட்ட வடிவமானதல்ல நீள்வட்ட வடிவமானதென்றும் கண்டுபிடித்தனர்.
  • கலிலியோ இறந்த ஆண்டாகிய 1642ல் ஐஸாக் நியூட்டன் பிரித்தானியாவில் பிறந்தார். கணிதம், பௌதிகம் (Physics) ஆகிய துறைகளில் பல கண்டுபிடிப்புகளை வழங்கினார். ஆப்பிள் மரத்திலிருந்து விழுந்ததைத் தொடர்ந்து புவியீர்ப்பு வ்சையைக் கண்டிபித்த இவர், அறிவியலில் பல விதிகளை கண்டுபிடித்து அதை உலகிற்கு வழங்கினார். அவர் இறக்கும்போது பிழையான பல பழைய நம்பிக்கைகள் கைவிடப்பட்டு புதிய கொள்கைகள் வலுப்பெற ஆரம்பித்தன.
  •   1938ல் தோன்றிய வில்லியம் ஹேர்ஷல் (William Herschel, 1738-1822) பிரித்தானியாவில் பிறந்தார். இதுவரை எண்ணியிருந்தபடி சூரியன் அண்டத்தின் மத்தியில் இல்லை எனவும், பல்லாயிரக் கணக்கான நட்சத்திரங்களைப் போல சூரியனும் ஒரு நட்சத்திரமே என்பதைக் கண்டுபிடித்தார். மேலும் அவர் தான் செய்த தொலைநோக்கியின் மூலம் 1781ம் ஆண்டில் யுறேன்ஸ் என்ற கிரகத்தையும் கண்டுபிடித்தார். பல நட்சத்திரங்களையும், அவற்றின் தூரத்தையும் கண்டுபிடித்த அவர், சில நட்சத்திரங்களின் ஒளியானது பூமியை வந்தடைய 20 கோடி வருடங்களாகும் எனவும் அறிவித்தார்.
  • தொலைநோக்கியின் உதவியால் நெப்ரியூன், புளூட்டோ என்ற புதிய கிரகங்களையும், சந்திரனின் மேற்பரப்பில் உள்ள மலைகளையும், பெரிய குளிகளையும் விஞ்ஞானிகள் கண்டனர். மேலும் வியாழன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் உபகிரகங்களையும் சனி கிரகத்தைச் சுற்றியுள்ள அழகான வளையங்களையும்ம் பார்த்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக பல்வேறு திசைகளிலும் நெபுலங்கள் என அழைக்கப்படும் உடுத்தொகுதிகளையும் கண்டுபிடித்தனர். தொலைநோக்கியின் உதவியால் இந்த துறை துரிதமாக முன்னேறியது.

சூரிய குடும்பம்:
 
நமது சூரிய குடும்பத்தில் மொத்தம் 9 கிரகங்கள் இருக்கின்றன. அவை முறையே,

1. புதன் (Mercury)
2. சுக்கிரன் (Venus)
3. பூமி (Earth)
    1. சந்திரன் (Moon) - உபக் கிரகம்
4. செவ்வாய் (Mars)
    1. போபோஸ் (Phobos) 2. டெய்மோஸ் (Deimos)
5. வியாழன் (Jupiter)
வியாழனில் 16 உபக் கிரகங்கள் உள்ளன. இதில் 4 உபக் கிரகங்கள் மிகப் பெரியவை. அவற்றின் பெயர்கள் பின்வருமாறு.
    1. அயோ (Io), 2. யூரோப்பா (Europa), 3. கனிமீட் (Ganymede), 4. கலிஸ்ரோ (Ganymede) ஏணைய கிரகங்களைப் பற்றி பின்வரும் தொடரில் பார்க்கலாம்.
6. சனி (Saturn)
சனி கிரகத்திற்கு 9 உபக்கிரகங்கள் உள்ளன. அவற்றின் பெயர்கள் பின்வருமாறு.
    1. மைமாஸ் (Mimas), 2. என்சிலாடஸ் (Eneceladus), 3. ரெதிஸ் (Tethys), 4. டயோன் (Dione), 5. றியா (Rhea), 6. ரிற்றான் (Titan), 7. ஹைபீரியன் (Hyperion), 8. யாபெற்றஸ் (Iapetus), 9. பீப்* (Phoebe).
7. யூறெனஸ் (Uranus)
    1. ஓபறன் (Oberon), 2. ரைற்றானியா (Titania), 3. ஏரியல் (Ariel), 4. உம்பிரியல் (Umbriel),  5. மிராண்டா (Miranda).
8. நெப்ரியூன் (Neptune)
    1. ட்ரைற்றன் (Triton), 2. நெரெய்ட் (Nereid).
9. புளூட்டோ (Pluto)

என்பனவாகும். இவற்றைப் பற்றி பின்வரும் தொடரில் நாம் விரிவாகக் காணலாம்.


1 comment:

  1. வாழ்த்துக்கள்..... தொடர்ந்து எழுதவும்.......

    ReplyDelete